1. தானே பெரியவன் தானே சிறந்தவன் என்ற அகந்தையை முதலில் விட்டு விடுங்கள்.
2. அர்த்தமில்லாமலும் தேவையில்லாமலும் பின்விளைவுகள் அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
3. எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசுக்காகக் கையாளுங்கள்.
4. சில நேரங்களில் சில சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
5. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
6. குறுகிய மனப்பான்மையை விட்டொழிங்கள்.
7. உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விட்டுவிடுங்கள்.
8. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக் கர்வப்படாதீர்கள்.
9. அளவுக்கதிமாகவும் தேவைக்கதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
10. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
11. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
12. அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
13. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
14. மற்றவர் கருத்துக்களைச் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
15. மற்றவர்களுக்கு உரிய மரியதையைக் காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
16. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
17. பேச்சிலும் நடத்தையிலும் திமிர்த்தனத்தையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
18. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள்.
19. பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
20. தேவையான இடங்களில் நன்றியையும்,பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.
Monday, November 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
ஆஹா ...''இனியவை இருபது'' .... இனிக்கிறது.......நல்வாழ்விற்கு வழிகாட்டுகிறது.
நன்றி
மதி
இனியவை இருபது.... . . இனிக்கிறது.......நல்வாழ்விற்கு வழிகாட்டுகிறது.
நன்றி
மதி
Post a Comment